அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துள்ளார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மாநிலத்திற்கு ஓர் நல்ல செய்தி. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நபர் குணமடைந்துள்ளார். ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதித்ததில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது; அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த சிகிச்சை முறையினாலும், அவசர கால நிலையை சமாளிக்கும் தமிழக சுகாரத்துறையின் திறமையினாலும் இத்தகைய விரைவான மீட்பு சாத்தியமாகியுள்ளது. தற்போது தமிழத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com