ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விஷாரம் அருகே ஹாஜி பேட்டையில் சாலையோர காம்பவுண்ட் சுவர் மீது லோடு வேன் மோதியதில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேல்விஷாரம் ஹாஜி பேட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நள்ளிரவு சோதனை லோடு வேனில் ஆற்காடு அருகே புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் ஹாதி 1வது தெரு அருகே வந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லோடுவேன் சாலையின் ஓரத்திலிருந்த காம்பவுண்ட் சுவரின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் வேனின் பின்புறம் நின்று கொண்டுவந்த துபைல், சையத், அலீம், கரிமுல்லா ஆகிய நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயங்களுடன் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து ஆற்காடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.