கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சேலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ரயில் முற்றிலும் இயங்கவில்லை.
இதனால் பொதுமக்கள் இன்றி சேலம் கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டது. உணவகங்கள் அனைத்து மூடப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.