சென்னை: கரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும் என்று திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக் கவசம், சேனிட்டைசர், சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை திமுக MLAs & MPs செய்ய வேண்டும்.
#CoronaVirus தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்! .
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அவரது வேண்டுகோளின்படி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு செய்த உதவி குறித்த பதிவை ‘ரீட்வீட்’ செய்து அவர் இந்த பதிவை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.