கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி சேலத்தில்..
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரமங்கலத்தில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை முதல் நடைபெற்று வரும் உழவர் சந்தையில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்றபடி காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ட்ரோன் கருவி மூலம் கிருநாசினியை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார துறையினர்.
காவல் துறையில் பயன்படுத்தப்படும் வருண் வாகன மூலம் சேலம் பெரியார் மேம்பாலத்தில் சனிக்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுட்டுள்ள போலீஸார்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உதரவை தொடர்ந்து தருமபுரியில் இருந்து பெரம்பலூர் செல்லுவதற்காக சனிக்கிழமை சேலம் புதிய பேருந்து சாலை வழியாக நடந்தே செல்லும் கழுதை பால் விற்பவர்கள்.