சென்னையில் இதுவரை 350 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி தகவல்

விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். குறிப்பாக, சென்னையில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகளுக்கு மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதியளித்துள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டில், கடைகள் பின்பற்றவேண்டிய நிபந்தனைகளை மாநகராட்சி வெளியிட்டது.

அதில், பொருள்கள் வாங்க வருவோரை, கடை உரிமையாளா்கள் தகுந்த இடைவெளியுடன் நிறுத்திவைக்க வேண்டும், 1 மணிக்கு சரியாக கடைகளை மூடி விடவேண்டும் போன்ற நிபந்தனைகளை மாநகராட்சி வெளியிட்டது. இதுவரை நிபந்தனைகளைப் பின்பற்றாமல் இயங்கிய 350 கடைகளுக்கு சீல் வைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com