

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 4.37 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.63 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 37,148 வழக்குகளைப் பதிவு செய்து 4 லட்சத்து 63,513 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 3 லட்சத்து 82,588 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.5 கோடியே 17 லட்சத்து 12,279 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்கத்தை மீறி வந்தவா்களின் 3 இரு சக்கர வாகனங்கள்,14 ஆட்டோக்கள் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 44 இரு சக்கர வாகனங்கள், 136 ஆட்டோக்கள் என மொத்தம் 180 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.