கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உணவுத் தட்டுப்பாடின்றி உதவிய விவசாயிகள் கௌரவிப்பு

பொது முடக்கத்திலும் உணவுப் பொருள்களைப் பயிர்செய்து மக்களுக்கு உணவுத்தடுப்பாடு இல்லாமல் தவறாது வழங்கி வரும் விவசாயிகளை 

News image
Updated On :16 மே 2020, 10:54 am

DIN

பொது முடக்கத்திலும் உணவுப் பொருள்களைப் பயிர்செய்து மக்களுக்கு உணவுத்தடுப்பாடு இல்லாமல் தவறாது வழங்கி வரும் விவசாயிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தினர் சனிக்கிழமை பாராட்டி கௌரவித்தனர்.

கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்களுக்கு அனைத்து தொழில்களும் உற்பத்தியை முடக்கி வைத்துள்ளனர். ஆனால், விவசாயத்தில் ஈடுபடும் உழவர்கள் உழைப்பதையே தொழிலாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து மக்களின் உணவுத் தேவையைத் தீர்த்து வைத்து வருகின்றனர்.

பொது முடக்கத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தங்களுக்கு விலை கிடைக்காவிட்டாலும் பொருள்களை விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான இடங்களில் விளைபொருள்களைப் பொதுமக்களுக்கு இலவசமாகவும் வழங்குகின்றனர். இத்தகைய அளப்பரிய பணியில் ஈடுபடும் விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயிகள் கௌரவிப்பு தினமாகச் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதன்படி, திருச்சி மாநகரம், திருவெறும்பூர், அந்தநல்லூர், திருவரங்கம், திருவானைக்கா, மணிகண்டம், சோமரசம்பேட்டை, வயலூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி கிளை சங்கங்களின் சார்பில் விவசாயிகளை அழைத்து கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருவெறும்பூர் மலைக்கோவில், மாரியம்மன் கோயில் தெருவில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கைத்தறி துண்டு அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே. முகமது அலி, மாநகர் மாவட்டச் செயலர் கே.சி. பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் பா. லெனின், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தனபால், காட்டூர் பகுதி செயலர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குக் கைத்தறி ஆடைகள் அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.