கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற தெருக்கூத்து மற்றும் நாடக கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பு நிலைய அலுவலர் எம்.இராமமூர்த்தி தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் முன்னிலை வகித்தார். ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற தெருக்கூத்து மற்றும் நாடக கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்களை தன்னார்வலர்கள் மோகன், கார்த்தி, மதுபாலா, ஜீவா,கணேசன் ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் ஜி.அந்தோணிசாமி, விஜயகுமார், ஜி.அன்பு, பிரகாசம்,ராமு, கனகதுரை, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தீயணைப்பு வீரர் என்.முனுசாமி செய்திருந்தார்.