அருப்புக்கோட்டையில் கணவனை இழந்த ஏழைப் பெண்களுக்கு நிவாரணப்பொருள்கள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுக் கணவனை இழந்த ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி ஆகியன புதன்கிழமை வழங்கப்பட்டன.
அருப்புக்கோட்டையில் கணவனை இழந்த ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி வழங்கிய விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்  துணைத்தலைவர் ம.அய்யனார்,மற்றும் அ.பழனிவேல்,அ.பகவத்சிங் உள்ளிட்டோர்.
அருப்புக்கோட்டையில் கணவனை இழந்த ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி வழங்கிய விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்  துணைத்தலைவர் ம.அய்யனார்,மற்றும் அ.பழனிவேல்,அ.பகவத்சிங் உள்ளிட்டோர்.
Published on
Updated on
1 min read

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ம. அய்யனார் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுக் கணவனை இழந்த ஏழைப்பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி ஆகியன புதன்கிழமை வழங்கப்பட்டன.

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ம.அய்யனார் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை திருநகரம், புளியம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த கணவனை இழந்த ஏழைப் பெண்களுக்குத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலவச சேலை மற்றும் நிவாரண நிதி ஆகியவற்றை ம. அய்யனார் தனதுஅலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது நேரில் வழங்கினார்.

அப்போது சுமார் 100க்கு மேற்பட்ட பெண்கள் நிவாரண உதவிகளைப் பெற்றுப் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தனியார் நிதிநிறுவன இயக்குநர்கள் அ.பழனிவேல், அ.பகவத்சிங் உள்ளிட்ட சமூகத் தொண்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோரும்,மேலும் 100க்கு மேற்பட்ட பயனாளிகளும் நேரில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com