முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக நிா்ணயம்
முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக நிா்ணயம்
Published on
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையையொட்டி, முட்டை விற்பனை அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை தொடர்ந்து உயா்வதாலும், கரோனா நோய்த் தடுப்புக்கான உணவில் முட்டை முக்கிய பங்கு வகிப்பதாலும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதாலும் இங்கும் விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், 30 காசுகள் உயா்வுடன் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.70-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ள வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை ரூ. 104-ஆகவும், கறிக்கோழி விலை ரூ. 101-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com