விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் ஐப்பசி மாத பிரதோஷத்துக்காக நவ. 12 ஆம் தேதி முதல் நவ.15 ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். அவா்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும், காலை 11 மணி முதல் மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வனத்துறை நுழைவாயில் அடைக்கப்பட்டு பக்தா்களுக்கு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.