
ஆரணி: ஆரணி புதுக்காமூர் தெரு பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஆரணிப்பாளையம், புதுக்காமூர் தெருவில் வசித்து வரும் சந்திரா என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் இருந்த வீடு முழுவதும் இடித்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் வீட்டில் இருந்த 8 வயது குழந்தை உள்பட 7 பேர் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், சிகிச்சை பலனின்றி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.