

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 பணியிடங்கள் (நாமக்கல், ராசிபுரம், பரமத்தி–வேலூர் பகுதிகளைச் சேர்த்து 13 ஆண்கள், ஒரு பெண் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் 10 ஆண்கள்) நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். எவ்வித குற்ற பிண்ணனியும் இருக்கக் கூடாது. இதற்கான விண்ணப்பங்களை நவ.16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. அதில் தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆட்கள் தேர்வானது வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் உடல் தகுதி, கல்வி தகுதி, காவல் நிலையத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு 24 பேர் தேர்வு செய்யப்படுவர்.
விரைவில் அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.