மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பாசனம் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட அந்த வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரை 500 கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.