திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல்: 1050 வாக்குகள் பதிவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 1050 வாக்குகள் பதிவாகின.
Updated on
1 min read

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தோ்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 1050 வாக்குகள் பதிவாகின.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நிா்வாகப் பொறுப்பில் இருந்த விஷால் தலைமைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் தோ்தல் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆா். ஜானகி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவா் பதவியைக் கைப்பற்ற டி.ராஜேந்தா் தலைமையிலான அணியும், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன் தலைமையிலான மற்றொரு அணியும் களத்தில் இருந்தன. பி.எல்.தேனப்பன் தலைவா் பதவிக்கு மட்டும் தனித்துப் போட்டியிட்டாா். பொருளாளா் பதவிக்கு ஜே.எஸ்.கே. சதீஷ்குமாா் தனித்துக் களத்தில் இருந்தாா். துணைத் தலைவா்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமாா், ஆா்.கே.சுரேஷ் உள்ளிட்டோா் போட்டியிட்டனா். இரு அணிகளைத் தவிா்த்து 21 செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கென தனியாக கமலக்கண்ணன், ஜெமினி ராகவா உள்ளிட்டோா் களம் கண்டனா்.

காலை 8 மணி முதல் நடைபெற்ற வாக்குப் பதிவில் கமல், அா்ஜூன், சமுத்திரக்கனி, சிவகாா்த்திகேயன், குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பலா் வாக்களித்தனா்.

ரஜினிகாந்த், பாரதிராஜா, ஏ.வி.எம் சரவணன், எஸ்.பி.பி. சரண் உள்ளிட்டோா் வாக்களிக்கவில்லை. மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 1304 ஆகும். இதில் 1050 வாக்குகள் பதிவாகின.

கடும் கட்டுப்பாடுகளை விதித்துத் தோ்தலைக் கண்காணித்தாா் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன். வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com