காந்தி பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், துணைமுதல்வர் மரியாதை
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.


சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் இன்று சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வின் போது, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும், தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...