ஸ்டாலின் பதற்றப்பட வேண்டாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கரோனா தடுப்பூசி இலவசம் என்ற முதல்வரின் அறிவிப்பை கண்டு ஸ்டாலின் பதற்றப்பட வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
Published on
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி இலவசம் என்ற முதல்வரின் அறிவிப்பை கண்டு ஸ்டாலின் பதற்றப்பட வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “கொடுக்கிற மனம் வள்ளலின் வாரிசுகளுக்குதான் வரும். கெடுகின்ற குணம் கெடு மதியாளர்களின் சூழ்ச்சியில்தான் தெரியும். கரோனா தடுப்பூசி இலவசம் என்ற எடப்பாடியாரின் அறிவிப்பு மக்கள் மனம் போற்றும் அறிவிப்பு.

இதைக் கண்டு ஸ்டாலின் பதற்றப்பட வேண்டாம். அய்யோ வடை அய்யோ வடை போச்சே என்று வருத்தப்பட வேண்டாம். வரலாற்றை திரும்பி பாருங்கள். மக்களை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் செய்தி மக்களால் கேலியாக பார்க்கப்படுகிறது.

உங்களது அரசியல் நடத்தை நகைப்பிற்குரியது. 2021-ல் உங்கள் திட்டம் எடுபடாது. மீண்டும் அம்மாவின் ஆட்சியே மலரும். இது வரலாற்று சரித்திரம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முன்னதாக திமுக மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரை பக்கத்தில், “இலவச கரோனா தடுப்பூசியை மக்களுக்கு தான் காட்டும் சலுகை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாரா? மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை.

நிர்கதியாக் நிற்கும் மக்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாக காட்டிக்கொள்வதை காண சகிக்கவில்லை” என்று தெரிவித்திருந்திருந்தா. இந்நிலையில், ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com