சிவனுக்கு ஆண்டு முழுவதும் பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் என 16 வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வருடத்திற்கு ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும். இன்று ஐப்பசி பௌர்ணமியையொட்டி ஈரோடு மாநகராட்சி பகுதியில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
இதைப்போல் மகிமாலீஸ்வரர் கோவில் கருங்கல்பாளையத்தில் உள்ள சோலிஸ்வரர் கோயில்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மகிமாலீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு 150 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சிவனை வழிபட்டுச் சென்றனர்.
சிவனுக்கு செய்யப்பட்ட அன்னாபிஷேகம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைப்போல் மாவட்டம் முழுவதும் பவானி அந்தியூர் ,சத்தியமங்கலம் ,கோபி, பெருந்துறை உள்பட பகுதிகளில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.