சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலி

சேலத்தில் மரம் அறுவை மில் உரிமையாளர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
தீயில் கருகிய வீடு
தீயில் கருகிய வீடு

சேலம்: சேலத்தில் மரம் அறுவை மில் உரிமையாளர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

குரங்குசாவடி அருகே நகரமலை பகுதியில் மரம் அறுவை மில் உரிமையாளர் அன்பழகன் வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அன்பழகனின் மனைவி புஷ்பா(40), சகோதரர் கார்த்திக்(40), கார்த்திக் மனைவி மகேஸ்வரி(35), கார்த்திக் மகன்கள் சர்வேஷ் (12), முகேஷ் (8) ஆகிய 5 பேர்  உடல் கருகி உயிரிழந்தனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரமங்கலம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com