

திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கியது.
ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் திருச்சியில் கிருமி நாசினி கொண்டு ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ரயில்நிலையத்துக்குள் அமைந்துள்ள இருப்புப் பாதைகளும் சரிபார்க்கப்பட்டு ரயில்கள் வந்து, செல்ல ஒத்திகையும் நடைபெற்றது.
பாதுகாப்பு ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சனிக்கிழமை முதல் பயணச்சீட்டு முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.
பயணச்சீட்டு பெற வரும் பயணிகள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. பயணிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பயணச்சீட்டுகளை பெற்றுச் சென்றனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் 10 கவுன்ட்டர்கள் உள்ளன. இதில், சனிக்கிழமை 5 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
தேவைக்கேற்ப அனைத்து கவுன்ட்டர்களும் திறக்கப்பட்டு பயணிகளுக்கு முன்பதிவு பயணச்சீட்டுகளை வழங்க தயாராக இருப்பதாக ரயில்நிலைய அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.