புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரத்தில் மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்த மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது.

News image

விழுப்புரத்தில் மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் திருட்டு

Updated On :29 செப்டம்பர் 2020, 9:49 am

DIN

விழுப்புரத்தில் அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்த மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது.

விழுப்புரம் கே.கே. நகர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் ராமஷேசு(65). மருத்துவரான இவர் விழுப்புரம் கே.கே. சாலையில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இவர்கள் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமஷேசு தனது மனைவி லட்சுமியுடன் கடந்த மாதம் வீட்டைப் பூட்டிக்கொண்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்குச் சென்றார்.

Story image

 வீட்டில் வெகு நாளாக ஆள் இல்லாததால் வீட்டை பராமரிக்க தனது நண்பர் ஜெயசீலனிடம்(49) சொல்லிவிட்டுச் சென்றார்.

இதன்படி ஜெயசீலன் அவ்வப்போது வந்து வீட்டைப் பார்த்துவிட்டு, பராமரிப்புப் பணிகளை செய்து விட்டுச் சென்றுள்ளார்.  இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஜெயசீலன், ராமஷேசு வீட்டுக்கு வந்துள்ளார்.  அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்துள்ளன. இது குறித்து ராமஷேசுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர் வீட்டில் சுமார் 60 பவுன் நகைகளை வைத்து விட்டுச் சென்றதாகவும், அவை திருடு போனதாக கூறியுள்ளார்.

 இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.  மேலும் மோப்பநாய் சாய்ன கொண்டு வரப்பட்டது. விரல்ரேகை நிபுணர்கள் வந்ததும் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரத்தில் மருத்துவர் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு போன சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.