மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் திறப்பு 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 

News image
Updated On :7 ஏப்ரல் 2020, 11:43 am

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், பாரத ஸ்டேட் வங்கி, தாராபுரம் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை, மாவட்ட நிர்வாகம் ஆகியன இணைந்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த சுரங்கப்பாதையை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ புரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா ஏ.சண்முகம், செயலாளர் ஏ.எல்.காண்டீபன், பொருளாளர் மெஜஸ்டிக் கந்தசாமி,திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.