சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வருகிறது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 1075 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக 196 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் புதிதாக 9 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மண்டல வாரியாக..
திருவொற்றியூர் - 4
மணலி - 0
மாதவரம்- 3
தண்ட்டையார்பேட்டை - 14
ராயபுரம் - 63
திருவிக நகர் - 26
அம்பத்தூர் - 0
அண்ணா நகர் - 22
தேனாம்பேட்டை - 14
கோடம்பாக்கம் - 20
வளசரவாக்கம் - 4
ஆலந்தூர் - 2
அடையார் - 6
பெருங்குடி - 6
சோழிங்கநல்லூர்-2
மற்றவர்கள் - 8
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுள் பலம் அதிகரிக்க...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


