விழுப்புரம் மாவட்டத்தில் விரைவு பரிசோதனை கருவி மூலம் கரோனா சோதனை தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதால், நோய் பரவலைத் தடுக்கும் வகையில், சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டு, மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் வந்துள்ளன. இதனையடுத்து விழுப்புரம் பாணாம்பட்டு பகுதியில் கரோனா தொற்றால் ஒருவர் உயிரிந்த நிலையில், அந்த பகுதியில் விரைவு பரிசோதனை கருவி மூலம் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் தலைமையில் பரிசோதனை தொடங்கியது.