ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ள 6 ஊராட்சிகளை சேர்ந்த 25 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு கே.வி. ராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்.
ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ள 6 ஊராட்சிகளான பேரோடு, பிச்சாண்டாம்பாளையம், மேட்டுநாசுவப்பாளையம், எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம் மற்றும் நசியனூர் சித்தோடு பேரூராட்சிகளில் வசிக்கும் 25,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கே .வி .ராமலிங்கம் பேரோடு, பிச்சாண் டாம் பாளையம் பகுதியில் இன்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நசியனூர் சித்தோடு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு 5 கிலோ அரிசி காய்கறி தொகுப்புகள், மளிகை சாமான்கள் ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் தலா 30 முட்டைகளை கே.வி .ராமலிங்கம் எம்எல்ஏ வழங்கினார்.