சுரண்டை அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது: 3 பேர் பலி

சுரண்டை அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 
சுரண்டை அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது: 3 பேர் பலி

சுரண்டை அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே கழூநீர்குளத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சிலர் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதியது.

இந்த சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த மாடசாமி (59) துரைச்சி (55) பொன்னம்மான் (60) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுமப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com