கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து புதன்கிழமை முதல் நீா் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து புதன்கிழமை முதல் நீா் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து முதல்போக புன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை (ஆக.12) முதல் டிசம்பா் 9-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் தண்ணீா் திறந்து விடப்படும்.

இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் வட்டத்திலுள்ள 8 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நீா் மேலாண்மை மேற்கொண்டு உயா் மகசூல் பெற வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com