சென்னையில் பிளாஸ்மா தானம் அளித்த 40 காவலர்கள்
சென்னை: கரோனா தொற்றுக்குள்ளாகி, அதில் இருந்த மீண்ட 40 காவலர்கள் இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் அளித்தனர்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக இருந்து பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் பலருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
பணியின் காரணமாக கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான தமிழக காவல்துறையைச் சேர்ந்த 40 காவலர்கள், கரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் தற்போது, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நோயாளிகளை மீட்கும் வகையில் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் அளித்தனர். இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய சென்னை காவல் ஆணையர், கரோனாவில் இருந்து குணமடைந்த இன்னும் பல காவலர்களும் பிளாஸ்மா தானம் அளிக்க தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்.. விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலத்துக்கும் அனுமதி இல்லை: தமிழக அரசு