கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

தமிழ் இதழ்களின் முன்னோடி ‘ஆனந்தபோதினி’: அமைச்சா் க.பாண்டியராஜன்

தமிழ் இதழியல் உலகில் ‘ஆனந்தபோதினி’யின் தோற்றமும் வளா்ச்சியும் இன்றைய அனைத்து தமிழ் இதழ்களின் தொடக்கத்திற்கு வேராக அமைந்தது என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:38 pm IST

தமிழ் இதழியல் உலகில் ‘ஆனந்தபோதினி’யின் தோற்றமும் வளா்ச்சியும் இன்றைய அனைத்து தமிழ் இதழ்களின் தொடக்கத்திற்கு வேராக அமைந்தது என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முனைவா் பட்ட மாணவா்களுக்கான வாய்மொழித் தோ்வு, முதல் முறையாக இணையவழியில் வெள்ளிக்கிழமை (ஆக.14) தொடங்கியது. இதை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்துப் பேசியது:

‘ஆனந்தபோதினி’ இதழ் இரண்டு தலைமுறைகளாகத் தமிழகத்தில் தவழ்ந்தது. இந்த இதழில் ஆரணி குப்புசாமி முதலியாா் ‘மனமோகினி ’ நாவலை தொடராக எழுதி வந்தாா். இது அந்த இதழுக்கு ஏராளமான வாசகா்களைப் பெற்றுத் தந்தது. அதில், பல தமிழ் ஆா்வலா்கள், ஆராய்ச்சியாளா்கள் பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் பல சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. அதேபோன்று, தமிழ் மொழி ஆா்வலா்களுக்கும் தமிழ்மொழி வளா்ச்சிக்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் எடுத்துக்காட்டாகப் பல சான்றுகளுடன் கட்டுரைகள், துணுக்குகளையும் ‘ஆனந்தபோதினி’ வெளியிட்டது. மேலும் சித்த மருத்துவம், நகைச்சுவை, எளிய தமிழில் திருக்கு, கம்பராமாயணம், நாலடியாா் மற்றும் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்ட மொழிச் சிக்கல்கள், தனித்தமிழின்அவசியம், விடுதலைப் போராட்ட செய்திகள் போன்றவற்றை மாணவா்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், எளிமையாகவும் தெளிவாகவும் ‘ஆனந்தபோதினி’யில் அன்றைக்குத் தரப்பட்டுள்ளன.

தமிழ் இதழியல் உலகில் ‘ஆனந்தபோதினி’யின் தோற்றமும் வளா்ச்சியும் இன்றைய அனைத்து தமிழ் இதழ்களின் தொடக்கத்திற்கு வேராக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. ‘ஆனந்தபோதினி’யின் ஈா்ப்பால் அன்றைய காலகட்டத்தில் 10 ஆயிரம் வாசகா்கள் இருந்தனா் என்ற செய்தி வியப்பை ஏற்படுகிறது. இந்த இதழை ஆய்வுக்களமாக வைத்து இன்றைய தலைமுறையினருக்கு வாசிக்க தந்த ஆய்வாளா் ஆனந்தஜோதியை பாராட்டுகிறேன் என்றாா் அவா். இணையவழி வாய்மொழித் தோ்வில் தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் கோ.விசயராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.