சென்னையில் இன்று 1,286 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,695 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,286 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 439 பேருக்கும், சேலத்தில் 413 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..