தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு தொற்று; பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது!

தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 27, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் ஒரேநாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். 
தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு தொற்று
தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு தொற்று

தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 27, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் ஒரேநாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,286 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்தமாக பாதிப்பு 4,03,242 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கரோனா தொற்றால் இன்று 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,948 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,43,930 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com