எப்போது கரையைக் கடக்கும் புரெவி புயல்?

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது புதன் காலையில் புயலாக வலுப்பெறும்.

இந்தப் புயலானது டிசம்பர் 2-ம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும். அடுத்து மன்னார் வளைகுடா பகுதிக்குள் வரும்.

இந்தப் புயலானது டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

புயல் கரையை கடக்கும் போது 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com