
மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு.
சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக பெய்து வரு கனமழையால் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.
சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவாக வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, 20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் சீர்காழி நகரிலுள்ள பாலசுப்பிரமணியன் நக,ர் அடையார் நகர், எஸ் கே ஆர் நகர், பாப்பையா நகர், தி நகர் சின்னத்தம்பி நகர், கற்பகம் நகர், கோவிந்தராஜன் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதியில் உள்ள உறுப்புகளை மழைநீர் 4 அடிக்கு மேல் சூழ்ந்துள்ளது.
இதனால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.
தேங்கியுள்ள மழை நீரை விரைந்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...