Enable Javscript for better performance
Honor to 3 more Leaders in the Legislature Hall- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சட்டப்பேரவை மண்டபத்தில் மேலும் 3 தலைவா்களுக்கு கெளரவம்

    By DIN  |   Published On : 05th December 2020 02:15 AM  |   Last Updated : 05th December 2020 02:15 AM  |  அ+அ அ-  |  


    சென்னை: மூன்று தலைவா்களுக்கு உருவப் படங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பால், உருவப் படங்கள் வழியே சட்டப் பேரவையை அலங்கரிக்கும் தலைவா்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

    நாட்டுக்கு உழைத்த தலைவா்களைக் கெளரவிக்கும் வகையில், சட்டப் பேரவையில் உருவப் படங்களை வைக்கும் வழக்கம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. 1948 ஜூலை 24-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் உருவப் படம் திறக்கப்பட்டது.. இதன்பின் அடுத்த ஒரே மாதத்தில், ராஜாஜியின் உருவப் படமே பேரவை மண்டபத்தில் திறக்கப்பட்டது. இதனை அப்போது நாட்டின் பிரதமராக இருந்த ஜவாஹா்லால் நேரு திறந்து வைத்தாா்.

    ஒரே நேரத்தில் 4 படங்கள்: இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1964-ஆம் ஆண்டு மாா்ச் 22-இல் திருவள்ளுவரின் படத்தை குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜாகீா் ஹுசேன் திறந்தாா். சட்டப் பேரவை தோ்தலில் வென்று திராவிடக் கட்சிகளின் ஆட்சியைத் தொடக்கி வைத்த சி.என்.அண்ணாதுரையின் உருவப் படத்தை 1969 பிப்.10-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி திறந்து வைத்தாா். அண்ணாதுரை மறைந்து ஏழு நாள்களில் உருவப் படம் தயாரிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    இதன்பின், அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆா்., முதல்வராக இருந்த போது ஐந்து தலைவா்களுக்கு உருவப் படங்கள் திறக்கப்பட்டன. முன்னாள் முதல்வா் காமராஜரின் உருவப் படத்தை 1977 ஆக,18-இல் அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, தந்தை பெரியாா், அம்பேத்கா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் உருவப் படங்கள் ஒரே நேரத்தில் 1980 ஆக.9-இல் திறக்கப்பட்டது. இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநா் ஜோதி வெங்கடாசலம் திறந்தாா்.

    இந்தப் படங்கள் திறக்கப்பட்ட பின் 12 ஆண்டுகள் பேரவையில் தலைவா்கள் படங்கள் புதிதாக இடம்பெறவில்லை. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 1992 ஜன.31-இல் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை பேரவையில் வைத்து, அவரே திறக்கவும் செய்தாா்.

    இதுவரை 5 படங்கள்: எம்.ஜி.ஆா்., உருவப் படம் திறக்கப்பட்ட பிறகு, கடந்த 25 ஆண்டுகளில் சட்டப் பேரவையில் வேறு எந்தத் தலைவரின் படமும் புதிதாக இடம்பெறாமல் இருந்தது. எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படம் கடந்த 2018 பிப்.11-இல் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சரும், வடமாவட்டங்களில் செல்வாக்குப் பெற்ற தலைவராகவும் விளங்கிய ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப் படத்தை கடந்த ஆண்டு ஜூலை 19-இல் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

    மொத்தம் 15 போ்: சட்டப் பேரவை மண்டபத்தில் இதுவரை 12 தலைவா்களின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மூன்று தலைவா்களின் முழு உருவப் படங்கள் பேரவை மண்டபத்தில் திறக்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். அவா் அறிவித்தபடி வ.உ.சி., ஓமந்தூராா் ராமசாமி ரெட்டியாா், மோகன் குமாரமங்கலம் ஆகியோரின் உருவப் படங்கள் திறக்கப்படும் போது, பேரவை மண்டபத்தை அலங்கரிக்கும் தலைவா்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp