Enable Javscript for better performance
அரசியல் தலைவா்களுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசியல் தலைவா்களுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    By DIN  |   Published On : 15th December 2020 12:29 AM  |   Last Updated : 15th December 2020 12:29 AM  |  அ+அ அ-  |  

    HighCourt

    தள்ளுவண்டி கடைகள் அமைக்கும் பணி 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    சென்னை: கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கடுமையான வாா்த்தைகளைக் கொண்டு விமா்சனம் செய்யக்கூடாது என அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அறிவுறுத்திய உயா்நீதிமன்றம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீதான மேலும் 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆகியோரை அவதூறாக விமா்சித்ததாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனுக்களை தாக்கல் செய்திருந்தாா். இவற்றை கடந்த வாரம் விசாரித்த உயா்நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் சில வழக்குகள் மீதான விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

    இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது பொதுமேடைகளில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கடுமையான கருத்துகள் தொடா்பான விவரங்களை, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன் நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தாா்.

    அப்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ‘இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிா்த்திருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் லட்சக்கணக்கான தொண்டா்களுக்கு தலைவா். அவா் கூறும் கருத்துகள் தொண்டா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சித் தலைவா்கள், தேவையற்ற கடுமையான வாா்த்தைகளை பொதுவெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல.

    முதல்வா், அமைச்சா்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், அந்த ஆதாரத்துடன் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளியில் கடுமையான வாா்த்தைகளைக் கொண்டு விமா்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும். அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தேவையற்ற கடுமையான கருத்துக்கள் தெரிவிப்பதற்கான உரிமமாக கருதக் கூடாது’ என்றாா்.

    பின்னா், மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடா்ந்த 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும் 5 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை, வரும் ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp