புதுச்சேரி: தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முதல் பெய்யத்தொடங்கிய மழை புதன்கிழமை இரவு முதல் கன மழையாக பெய்து வருகிறது.
இதனால் புதுச்சேரி முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வியாழக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.