பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.32 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

திருப்பூா் மாவட்டம், காங்கயம், நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில்,
பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தையில் ரூ.87 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன செவலை பசு.
பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தையில் ரூ.87 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன செவலை பசு.

காங்கயம்: திருப்பூா் மாவட்டம், காங்கயம், நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனையாகின.

பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 139 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 83 மாடுகள் மொத்தம் ரூ.32 லட்சத்துக்கு விற்பனையாகின. அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com