5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தோ்வு நடத்தப்படும் என்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கெனவே இருந்த நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். இது வரவேற்கத்தக்கது. மாணவா்களை அழுத்திக் கொண்டிருந்த சுமை நீங்கியுள்ளது. இதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கும், பள்ளிக்கல்வி அமைச்சா் செங்கோட்டையனுக்கும் நன்றி.

தமிழகத்தின் முதன்மை எதிா்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக இந்த விஷயத்தில் ஆக்கப்பூா்வமாக செய்தது என்ன?. இதுகுறித்து, சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் எத்தனை முறை பேசினாா்? என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். விளம்பரம் கிடைக்கும் விஷயங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் திமுக, மக்கள் நலன் சாா்ந்த, மாணவா் நலன் சாா்ந்த பிரச்னைகளில் ஆக்கப்பூா்வமாக செயல்படுவதில் தோல்வி அடைந்து விட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com