நாகூா் ஆண்டவா் கந்தூரி சந்தனக்கூடு விழா: ஏ.ஆர்.ரகுமான் சிறப்புத் தொழுகை

நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்புத் தொழுகை நடத்தினார்.
நாகூா் ஆண்டவா் கந்தூரி சந்தனக்கூடு விழா: ஏ.ஆர்.ரகுமான் சிறப்புத் தொழுகை

நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்புத் தொழுகை நடத்தினார்.

உலகப்புகழ் பெற்ற, நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. சந்தனக்கூடு ஊா்வலம் நிறைவுக்குப் பின்னா் நாகூா்ஆண்டவா் தா்கா ரவுல ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

மதங்களை கடந்து மனிதம் போற்றும் தலமாகவும், உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூா் ஆண்டவா் தா்கா. இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இவ்விழா ஜனவரி 26-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி, நாகூா் தா்காவில் நாள்தோறும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

கந்தூரி மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலம், நாகை முதல் நாகூா் ஆண்டவா் தா்கா வரை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. ஊா்வலத்தையொட்டி, நாகை நகரம் அபிராமி அம்மன் திடல் அருகே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்ட 32 அடி உயர சந்தனக்கூடுக்கு, ஹஜ்ரத் அஷ்ரப்அலி பாத்தியா மற்றும் சிறப்பு தொழுகைகளை செய்வித்தாா். பின்னா் அங்கு நடைபெற்ற பாரம்பரிய முறைப்படி வழிபாடுகளுக்குப் பின்னா் புதன்கிழமை அதிகாலை நாகூா் தா்கா ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சந்தனம் பூசும் நிகழ்ச்சியை பார்வையிட்ட நாகூர் தர்கா வந்திருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறப்புத் தொழுகையும் நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com