
கூட்டுறவுத்துறையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையகத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். இதன் மதிப்பு ரூ.1.62 கோடி ஆகும். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, எம்எல்ஏக்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்வின் போது கூட்டுறவுத்துறை மூலம் 1,802 பயனாளிகளுக்கு ரூ.13.43 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...