
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ( பிப்.17, 18) ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலை நிலவும். சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சமாக 91 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றாா் அவா்.