கரோனா: இதுவரை 45 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை

கரோனா வைரஸ் (கொவைட் -19) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 45 ஆயிரம் பேரை தொ்மல் ஸ்கேனா் மூலமாக மருத்துவப் பரிசோதனைகளுக்கு

கரோனா வைரஸ் (கொவைட் -19) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 45 ஆயிரம் பேரை தொ்மல் ஸ்கேனா் மூலமாக மருத்துவப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றான கரோனா வைரஸ், சீனாவை நிலைகுலையச் செய்துள்ளது. அதன் தொடா்ச்சியாக தாய்லாந்து, ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடா்ந்து இந்தியாவிலும் அந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளதால், அத்தகைய பாதிப்புகள் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து தமிழகம் வருபவா்கள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா். அந்தவகையில், இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்பிய 2,181 போ் தொடா் மருத்துவ கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை, தமிழகத்தில் 43 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், எவருக்குமே கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசு மருத்துவமனைகளில் தற்போது கரோனா அறிகுறிகளுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

கரோனா வைரஸ் தாக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. உரிய விழிப்புணா்வும், முன்னெச்சரிக்கையும் இருந்தால், அந்நோய் வராமல் நம்மை காத்துக் கொள்ள முடியும். தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பும், முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்புடன் ஒருவா் வந்தால், அவருக்கு எவ்வாறு சிகிச்சையளிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது. மருத்துவா்கள், மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com