ஆம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பள்ளிவாசல் முன்பு பந்தல் அமைத்து நேற்று இரவு முதல் தொடர் போராட்டம் என்று அறிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அவர்களில் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்தனர். கைதான 10 பேரும் ஆம்பூர் நகர போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.