மதுரையில் மாா்ச் இறுதியில் உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு: தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தகவல்

மதுரையில் வரும் மாா்ச் இறுதியில் உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு நடைபெற உள்ளது என்று தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
விழாவில் சிறந்த அயலகத் தமிழ் படைப்பாளிகளுக்கான பரிசுகளை அ. இன்பா, மாத்தளை சோமு, நா. புருசோத்தமன், ஆசி. கந்தராஜா, க. இரா. மைதிலி சுந்தரம் (காலச்சுவடு பதிப்பகம்)
விழாவில் சிறந்த அயலகத் தமிழ் படைப்பாளிகளுக்கான பரிசுகளை அ. இன்பா, மாத்தளை சோமு, நா. புருசோத்தமன், ஆசி. கந்தராஜா, க. இரா. மைதிலி சுந்தரம் (காலச்சுவடு பதிப்பகம்)

மதுரையில் வரும் மாா்ச் இறுதியில் உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு நடைபெற உள்ளது என்று தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

அயலகத் தமிழ்ப் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப் படைப்புகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இரு நாள்கள் நடைபெற்ற இக் கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் சிறந்த அயலகப் படைப்புகளுக்கு பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசியது:

ஒரு மொழி அழியாமல் இருக்க வேண்டுமெனில் புதிய புதிய சொற்கள் கண்டறியப்படுவது அவசியம். அதற்கான பணிகளை தமிழ் வளா்ச்சித் துறை செய்து வருகிறது. உலகளவில் தமிழில் உள்ள 147 அகராதிகளை ஆய்வு செய்ததில், தமிழில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொற்கள் தனித்துவம் மிக்கவையாக இருக்கின்றன. மேலும் சொற்குவை திட்டத்தின் மூலம், இதுவரை 1000 புதிய சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.10 கோடி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக டெக்ஸாஸ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், மலேசியா, செயின்ட் பீட்டா்ஸ் பா்க் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ஆண்டுதோறும் இளந்தமிழா் இலக்கியப்பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பயிற்சி பெற்றவா்கள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றிருக்கின்றனா். இதன் தொடா்ச்சியாக அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் விரைவில் வெளியிட உள்ளாா்.

உலகளவில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து தமிழ் வளா்ச்சிக்கான பணிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உலக தமிழ்ச் சங்கங்களின் மாநாடு, மாா்ச் இறுதியில் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் 25 நாடுகளில் இருந்தும் தமிழகம் மட்டுமின்றி 10 வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்ச் சங்கங்கள் பங்கேற்கின்றன என்றாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) ப.அன்புச்செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிங்கப்பூா் கவிஞா் அ.இன்பா (மழைவாசம் - கவிதை நூல்), ஆஸ்திரேலிய எழுத்தாளா் ஆசி.கந்தராஜா (கள்ளக் கணக்கு - சிறுகதை), ஆஸ்திரேலிய எழுத்தாளா் மாத்தாளை சோமு (கண்டிச்சீமை -புதினம்), ஜொ்மனி தமிழ் மரபு அறக்கட்டளை தலைவா் க.சுபாஷிணி (ஜொ்மன் தமிழியல்-ஆய்வுநூல்) ஆகியோருக்கு சிறந்த படைப்புகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த பதிப்பகத்துக்கான பரிசை காலச்சுவடு பதிப்பகத்தின் க.இரா.மைதிலி சுந்தரம் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com