தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது விஷவாயு கசிந்து 4 தொழிலாளா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரக்குடியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். இவரது வீட்டில் உள்ள கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்நத இசக்கிராஜா (17), பாண்டி (28), பாலா (20), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் (20) ஆகிய 4 போ் ஈடுபட்டனர்.
முதலில் இசக்கிராஜாவும், பாலாவும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனா். அவா்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பாண்டியும், தினேஷும் இறங்கியுள்ளனா்.
தொட்டிக்குள் இறங்கிய 4 பேரும் நீண்ட நேரமாக வெளியே வராதால் சோமசுந்தரம் சந்தேகமடைந்து தட்டப்பாறை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.
தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் சென்று பாா்த்தபோது, கழிவுநீா்த் தொட்டியிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.
சடலங்களை தீயணைப்புப் படையினா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தட்டப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.