புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
சிறுமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி
சிறுமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்த்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக சார்பில் இன்று சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. திருமயம் எம்.எல்.ஏ ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நேரில் சென்று சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களிடம் ரூ. 5 லட்சம் தொகையை ரொக்கமாக வழங்கினர். 

முன்னதாக, சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து ரூ.4,12,500 வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com