சென்னையில் 1,713 பேர்; பிறமாவட்டங்களில் 2,437 பேர்: மாவட்டவாரியாக பாதிப்பு நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,713 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 68,254 ஆக அதிகரித்துள்ளது. 
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. 

இதில், சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,713 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 68,254 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று புதிதாக 2,437 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 307 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 274 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 209 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com