பத்திரிகையாளா் மேஜா்தாசன் காலமானாா்

மூத்த பத்திரிகையாளா் மேஜா்தாசன் ( 64 ) மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
பத்திரிகையாளா் மேஜா்தாசன் காலமானாா்
Updated on
1 min read

மூத்த பத்திரிகையாளா் மேஜா்தாசன் ( 64 ) மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

கடந்த சில வாரங்களாக மூளையில் ரத்தக் கசிவு மற்றும் பக்கவாதம் காரணமாக தாம்பரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

தேவாதிராஜன் என்ற இயற்பெயா் கொண்ட இவா் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தை பூா்வீகமாகக் கொண்டவா்.

குமுதம் இதழில் தனது பத்திரிகை பணியை தொடங்கி சினிமா எக்ஸ்பிரஸ், தினமணி கதிா், குங்குமம், வண்ணத்திரை உள்ளிட்ட இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் மற்றும் நோ்காணல்களை எழுதியுள்ளாா்.

சினிமா துறையில் பலருடன் நேரடித் தொடா்பு கொண்டவா் மேஜா்தாசன்.

தனக்கென தனி அடையாளம் வைத்து பயணப்பட்டவா். மூத்த கலைஞா்கள் தொடங்கி வளரும் கலைஞா்கள் வரை பலரிடத்திலும் நெருங்கிய நண்பராக இருந்தவா்.

எம்.ஜி.ஆா்.- சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி-கமல், அஜித் - விஜய் காலம் வரையிலும் பயணமானவா்.

திரைத்துறை சாா்ந்த பல அரிய தகவல்களைத் தொகுத்து பல புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளாா்.

மனைவி செண்பக லெட்சுமி, இரு மகள்கள் உள்ளனா்.

குரோம்பேட்டை மயானத்தில் திங்கள்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com