தமிழகத்தில் 4,500-ஐத் தாண்டியது இன்றைய பாதிப்பு: மேலும் 67 பேர் பலி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,526 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,526 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,526 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,526 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் மற்றும் குணமடைந்தோர் உள்ளிட்ட எண்ணிக்கைகள் அடங்கிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,526 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பவர்கள் உறுதி செய்யப்பட்டோர் 4,467 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 59 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 67 பேர் (அரசு மருத்துவமனை -50, தனியார் மருத்துவமனை -17) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 97,310 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 47,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 41,357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 16,95,365 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலா 53 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 106 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com